அருந்ததியர் இட ஒதுக்கீடு-உயர்மட்டக் கூட்டம்
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 4, 2008
சென்னை: அருந்ததியர் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.கோட்டையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நீதிபதி ஜனார்தனம், அமைச்சர்கள் துரைமுருகன், ஸ்டாலின், தமிழரசி, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர் கனகராஜ், சட்டத்துறை செயலாளர் தீனதயாளன் ஆகியோர் பங்கேற்றனர்.
Tags: chennai, tamilnadu, caste, committee, meeting, ஜாதி, தாழ்த்தப்பட்டோர், நலம், அருந்ததியர்.
No comments:
Post a Comment